தஞ்சை மீன் குழம்பு
தேவையானவை
- 500 கிராம் மீன்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 100 கிராம் தக்காளி
- 1/2 மூடி தேங்காய் பூ
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 3 ஸ்பூன் மல்லி தூள்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன் கடுகு ,உ.பருப்பு
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 10 பல் பூண்டு
- சிறிது கறிவேப்பிலை
- தேவையான அளவு எண்ணய்
- தேவையான அளவு உப்பு
- புளி எலும்பிச்சை அளவு
செய்முறை :
சின்ன வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சோம்பு,சீரகம்,பூண்டு,தேங்காய் ஆகியவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.கனமான பாத்திரத்தில் 100 மில்லி எண்ணயை விட்டு காய்ந்தும் கடுகு,உ.பருப்பு, வெந்தயம் ,கறிவேப்பிலையை போட்டு தாளித்து,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.அதில் அரைத்த மசாலாவை போட்டு நன்றாக வதக்கி , அதனுடன்
தக்காளியை போட்டு,மல்லி,மிளகாய் தூள்களை கலந்து வதக்கவும்.
அவை நன்றாக வதங்கியதும்,புளி தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு மீன்களை போட்டு ,தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் இறக்கி மூடவும்.ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.
Key word: Fish recipe, meen kulambu, fish curry
No comments:
Post a Comment