பாலக் அடை
தேவையானவை
- 200 கிராம் பசலைக் கீரை
- 100 கிராம் பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- சிறிது மல்லி தழை
- 100 கிராம் அரிசி மாவு
- 100 கிராம் கடலை மாவு
- 2 ஸ்பூன் மைதா
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகு தூள்
செய்முறை :
நறுக்கி அலசி சுத்தம் செய்யப்பட்ட ப்சச்ளைக் கீரையை,இட்லி தட்டுகளில் பரப்பி வைத்து 10 நிமிடம் வேகவிட்டு எடுத்து,மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,செரித்து மல்லித் தழை ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசி மாவு,கடலை மாவு,மைதா ஆகியவற்றை அரைத்து காரை ,மற்ற பொருட்களை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.1/2 மணி நேரம் கழித்து கரைத்த மாவில் சீரகத் தூள் ,மிளகுத் தூள்,செரித்து கறிவேப்பிலை போட்டு தோசை கல்லில் அடையாக ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.வெங்காயத் துவையலுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment