Tuesday, 16 June 2015

சத்து உணவு.

நார்சத்து அடங்கிய உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இங்கும் அங்கும் மருத்துவர்களும் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருப்பிர்கள். ஆனால் நம்மில் பலர் அதை அலட்சியபடுத்துகிறோம். அது பெரும் தவறு, அதற்கு அறியாமையே மூலக் காரணம். நார்சத்தின் உண்மையான அத்தியாவசிய தேவையை உணரும்போது தான் அதன் அருமை புரியும்.
நார்சத்து குறைவான உணவுகளை உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் நோய் வந்துவிடும். அடிக்கடி மலச்சிக்கலினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாளடைவில் மூலம் (hemorrhoids) அல்லது குதபிளவு (anal fissure) நோய்கள் வந்து விடும். இந்த நோய்கள் கடுமையான வலியைத் தரும், மேலும் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை வெகுவாக முடக்கி விடும். இவற்றை குணப்படுத்துவதற்கு பெரும்பாலான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறைகளைத்தான் பரிந்துரைப்பார்கள்.
அதிக அளவில் நார்சத்து அடங்கிய சில வகை உணவுகளை காண்போம்.

Monday, 15 June 2015

எளிய மூலிகையின் இனிய பலன்கள்

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு, புண்.
சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு.
ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்.
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
திரிகடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம். கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.
கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்.

Sunday, 17 May 2015

கருப்பட்டி பணியாரம்

தேவையான பொருட்க்கள்:
இட்லி மாவு ,
கருப்பட்டிதுருவியது,
தேங்காய் துருவியது,
ஏலக்காய் பொடி,
செய்முறை விளக்கம்:
அனைத்தையும் நன்றாககலைக்கவும்.பனியாரம் சுடுவது போல் சுட்டு எடுக்கவும்.
இது மிகவும் சத்தான திண்பண்டம்.இது மிகவும் சத்தான திண்பண்டம்.குழந்தைகளூக்கு.மாலையில் உணவாக கொடுக்கலாம்.நன்றாக ஜிரனமாகும்.


கொள்ளு சூப்.

சூப் தயாரிக்க தேவையன பொருட்கள்:-


  • கொள்ளு - ஒரு மேசைக்கரண்டி,


  • புளி- 1கிராம்,


  • சீரகம் - ஒரு தேக்கரண்டி,


  • மிளகு - 5,


  • கொத்த மல்லி  - கால் தேக்கரண்டி,


  • சின்ன வெங்காயம் - 2,
  • மிளகாய் வற்றல்-2,


  • பூண்டு - 2 பற்கள்,


  • உப்பு - தேவையான அளவு,



  • பொதினா- தேவையான அளவு,
  • கொத்தமல்லிஇலை-தேவையான அளவு,


  • கடுகு, எண்ணெய் - தாளிக்க.
செய்யும்முறை:
                கொள்ளுடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு,பொதினா மற்றும் கொத்த மல்லி  சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். புளியை ஊரவைத்து நன்றாக கரைத்து  கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளிக்கவும். கரைத்த புளி, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிரிது தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதிக்கும்முன்(நுரைத்தவுடன்) இறக்கவும்.
சுவையான கொள்ளு  சூப்  தயார். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். மிதமான சூட்டில் சூப் போலவும் பருகலாம்.
குரிப்பு:
இந்த  சூப் ஜலதோசத்திற்கு நல்லது. இதை 5 தினங்கள் தொடர்ச்சியக உட்கொண்டால் ஜலதோசம் குனமாகும்.

Thursday, 2 April 2015

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு புதியமுறை அறிமுகம்.

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு புதியமுறை அறிமுகம்.ரயில் டிக்கெட்டை 120- நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று 13.45 லட்சம் டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

நடை முறையில் இருந்த 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்கள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மாத காலம் முன்கூட்டியே முன்பதிவு செய்வதால் தங்கள் விடுமுறையை திட்டமிட இது பயணிகளுக்கு பெரும் உதயவியாக உள்ளது. 

எனினும் 120 -நாள் முன்பதிவு முறை தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தாது என்று ரயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு பயனர் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இ-டிக்கெட் அமர்வுவின் உள்நுழைந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 

Saturday, 21 February 2015

காமாலைக்கு மூலிகை மருத்துவம்.

காமாலை நோய் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தின்மூலம் .ஆரம்ப நிலையிலேயே முற்றியலும் குணப்படுத்திவிடலாம்.
தேவையான பொருட்கள்.
1.கீழாநெல்லி- 5கிராம்,














2.ஆவராம் பூ  5கிராம்,













3.சீரகம்  5கிராம்,
4.மிளகு 10,
5.வெள்ளாட்டுப்பால் 50மில்லி.
 செய்முறை விளக்கம்.
1 முதல் 4 வரை கூறி உள்ளாவற்றை நன்றா அரைத்து ஆட்டுப்பாலுடன் கலந்து 12 நாட்கள் குடிக்கவும்.முற்றிலும் குணமாகும்.



Wednesday, 18 February 2015

கோபத்தை குறைக்கும் மூலிகை வைத்தியம்,

வாக்கையில் கோபத்தை குறைத்துக் கொண்டாலே அனைத்து வகை சுகங்கத்தையும் எளீதில்அடைந்த்விடலாம்.அதற்கு மூலிகை வைத்தியம் பெரிதும் உதவும்.அதுபற்றீ காண்போம்.
தேவையான பொருட்கள்.
1.ஆவராம் பூ=10கிராம்,













2.ரோஜா பூ=10கிராம்,
3.மகிளம்பூ-10கிராம்,
4.ஏலக்காய்=3,













5.ஆப்பிள்=1,
6.கல்கண்டு=10கிராம்,
7.நெய்=5010கிராம்.
செய்முறை விளக்கம்;
1 முதல் 6 வரையன மூலிகைகளை அரைத்துக்கொள்ளவும் .பிறகு நெய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையையும் நன்றாக கலக்கவும்.பிறகு வணலியில் வைத்து அடி பிடிக்காமல் மைசூர்பா பக்குவதிற்கு காய்ச்சி இறக்கவும்.இது குல்கண்டு போல் இருக்கும்.இதை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.கோபத்தை குறைக்கும் சிறந்த மூலிகை வைத்தியம்.

Monday, 16 February 2015

மலச்சிக்கல்குணமாக.















தேவையான பொருட்கள்.
கம்பு  மாவு   - 2 கப் 
இட்லி மாவு  - அரை கப்
உளுந்தம்பருப்பு - 2  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
தயிர்               - அரை கப்
உப்பு             - தேவையான அளவு

செய்முறை.
{கம்பு மாவு மளிகை கடைகளில் கிடைக்கும் } கம்பு மாவு  ,இட்லி மாவு, தயிர், உப்பு ,பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்  நறுக்கியது -சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
குறிப்பு.
இதை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சாப்பாடு செய்தும் சாப்பிடலாம்.இது சிறந்த மலம் இக்கி.

Tuesday, 10 February 2015

வாதம் குணமாக-எளீய-மூலிகை-வைத்தியம்.

தேவையான மூலிகைகள்;
1.ஆண் பனம் பூ(பனை பாளை காய்ந்தது)-10 கிராம்,
2.மிகாய் வற்றல்-2,
3.கிராம்பு-10,







4.சீரகம்-10 கிராம்,







5.பூண்டு- 6 பல்,







6.தண்ணிர் 200 மில்லி.
செய்முறை விளக்கம்;
மூலிகைகள் அனைத்தையும் பொடி செய்து கொள்ளவும்.இந்த மூலிகை கலவையை 200மில்லி தண்னீர்ரில் கொதிக்க வைத்து,100 மில்லியாகும் வரை கொதிக்கவிடவும் .சூடு ஆறியபின் வடித்து பெரியவர்கள் 100 மில்லி சிரியவர்கள் 50 மில்லி வரை ஒரு மண்டலம் அருந்தவும்.அனைத்து விதமான வாதனோய்களும் குணமகும்.

Saturday, 7 February 2015

ஆஸ்த்மா--மூலிகை-வைத்தியம்,

தேவையான தேவையானகள்;
1.மருதஇலை முதிர்ந்தது,












2.மஞ்சள் கரிசலாங்கண்ணி,










3.அண்ணாசிப்பூ,
4.சோம்பு,











5.மிளகு,














6.தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
இந்த மூலிகைகலை 1லிட்டர் தண்னீரரில் 1/2 லிட்டர் ஆக சுணடும் வரை காயீசவும் .
இதை சிரியவர் 50மில்லியும்,பெரியவர்கள் 100 மில்லியும் வாரமொரு முரை பருகலாம்.
தொடர்ந்து பருகினால் நூரைஈரல் நண்றகவும்,ஆஸ்த்மா வரமலும் இருக்கும்.


Monday, 2 February 2015

தொப்பை கரைய















தேவையனபொருட்கள்;












முருங்கை இலை 10gram












சின்னவெங்காயம் 10gram













வரகு சாப்பாடு 10gram
சீரகம் 1gram
நல்லெண்ணெய் 2gram
உப்பு  தேவையன அளவு.
செய்முறை;
கீரை சமைப்பது போல் நல்லெண்ணெய் விட்டு சமைக்கவும். இவற்றூடுடன் வரகு சாப்பாடு சேர்த்து 48 நாட்கள் சாபிட்டுவரவும்.
சாப்பாட்ற்கு முன்னர் அல்லது பின்னர் .2கீ,மி நடக்கவும்.
பக்கவிளைவு  இல்லாத பயன் எளிதில்  கிடக்கும்.
குறிப்பு;
முருங்கை இலை அரைவேக்காடுஆக சமைக்க வேண்டும்.

adf